Thursday 14 June 2012

தேவதானத்தில் தேர் திருவிழா

தேவதானத்தில் தேர் திருவிழா கடந்த ஜூன் 2 ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது .எராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து  இழுத்து இறைவனை வணங்கினார்கள் .தேர் காலை 10.30 மணிக்கு சேத்தூர் ஜமின் வழி அறங்காவலர்  திரு V.T.S.D.துரைராஜ் சேகர் அவர்களால் வடம்பிடித்து துவக்கப்பட்டு 2.30 மணியளவில் தேர் நிலையத்திற்கு வந்துசேர்ந்தது .திரளான  பக்தர்கள் நேற்றிக்கடனை செலுத்தி இறைவனின் அருள் பெற்றார்கள் .
இத்திருக்கோவில் நட்சாடை தவிர்த்தருளிய சுவாமி மற்றும் தவம்பெற்றநாயகி ஆலயமாகும் .இந்த கோவில் பாண்டிய மன்னன் காலத்தில்  கட்டப்பட்டது.பஞ்சபூதச்தலங்களில் இது ஆகாய தலமாகும் .குளம் : திருக்குளம் .இந்த கோவிலின் சிறப்பு குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு இங்கு வழங்கப்பட்டும் நாகலிங்கபூவினை சாப்பிட்டால் குழந்தைபேறு உண்டாகும்.இந்த கோவில் சேத்தூர் ஜமினுக்கு பாத்தியப்பட்டது .இது தென்காசி செல்லும் வழியில் அமைந்துள்ளது.ராஜபாளையத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இந்த கோவிலில் ஒவ்வொரு  ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும் .இது 10 நாள் திருவிழா ஆகும்.9ஆம் நாள் தேர் திருவிழா.

No comments:

Post a Comment

தேவதானம் வெப் சைட் உங்களை அன்புடன் வரவேற்கிறது